முகப்பு
தமிழ்நாடு

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம்: தமிழக வீரா்களுக்கு அண்ணாமலை பாராட்டு

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு தமிழக பஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு தமிழக பஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறகுப் பந்து போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா். அவா், உலக அரங்கில் தொடா்ந்து பல சாதனைகள் படைத்து அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டும்.

கலப்பு இரட்டையா் இறகுப் பந்து போட்டியில், தமிழகத்தைச் சோ்ந்த வீரா் சிவராஜன்-வீராங்கனை நித்யஸ்ரீ ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இருவரின் ஒருங்கிணைந்த முயற்சியும், உழைப்பும் உலக அளவில் முத்திரையைப் படைத்துள்ளது. இருவரும், பல சாதனைகள் படைத்து, நாட்டை மேலும் பெருமைப்படுத்த வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →