பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீயால் முற்றிலும் எரிந்து நாசமான பேருந்து 
தமிழ்நாடு

சிதம்பரம் அருகே பள்ளி பேருந்தில் தீ: மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சிதம்பரம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மினி பேருந்து வியாழக்கிழமை காலை பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பி.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகே சென்று கொண்டிருந்த போது பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீ மள மளவென பேருந்து முழுவதும் பரவி எரியத் தொடங்கிய நிலையில் பேருந்தில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிரோடு மீட்கப்பட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத் துறை நிலைய அதிகாரி ஜெயகுமார் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் கே.முருகதாஸ், ஆர். சுரேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT