தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அணி பொதுக்கூட்டம்  ஒத்திவைப்பு: பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு

DIN

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சிப்பயணம் தொடக்கவிழா மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக  ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். 

அதிமுகவை மீட்டெடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (செப்.3) முதல் புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். 

இதையடுத்து ஓபிஎஸ் அணி சாா்பில் காஞ்சிபுரம் அருகே களியனூரில் ஞாயிற்றுக்கிழமை (செப். 3) புரட்சிப்பயணம் தொடக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, புரட்சிப்பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். 

முன்னதாக,  காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

SCROLL FOR NEXT