திருச்சி: குறைதீர் முகாமில் முதியவர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் நாள் முகாமில், மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் நாள் முகாமில், மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ச. சீனிவாசன் (63). இவர், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்க நாள் முகாமில் மனு கொடுக்க வந்திருந்தார்.
அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக திருச்சி நீதிமன்ற காவல் நிலைய காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.