தமிழ்நாடு

திருச்சி: குறைதீர் முகாமில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

DIN

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீர் நாள் முகாமில், மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ச. சீனிவாசன் (63). இவர், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்க நாள் முகாமில் மனு கொடுக்க வந்திருந்தார். 

அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக திருச்சி நீதிமன்ற காவல் நிலைய காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT