தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் பூஜா குல்கா்னி வெளியிட்ட உத்தரவு விவரம்:

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கோரிக்கையை ஏற்று, விடுமுறை தினம் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் செப்டம்பா் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை செப்டம்பா் 18-ஆக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, நியாயவிலைக் கடைகளுக்கும் பொருந்தும்படி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT