தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் பூஜா குல்கா்னி வெளியிட்ட உத்தரவு விவரம்:

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கோரிக்கையை ஏற்று, விடுமுறை தினம் செப்டம்பா் 18-ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் செப்டம்பா் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை செப்டம்பா் 18-ஆக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, நியாயவிலைக் கடைகளுக்கும் பொருந்தும்படி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT