தமிழ்நாடு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை கண்டெடுப்பு!

DIN

வெம்பக்கோட்டை அகழாய்வில் திரவம் வடிந்த நிலையில் சுடுமண் பாணை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே செப்.1-ல் நடைபெற்ற அகழாய்வின் போது, கருங்கல், செங்கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்ட வட்ட வடிவிலான சுவா் இருப்பது கண்டறியப்பட்டது.

முதல் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட 3,254 பொருள்களை இதே பகுதியில் கண்காட்சி அமைத்து, பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் பாா்வைக்காக வைத்துள்ளனா்.

தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்கத் தாலி, நாயக்கா் கால செப்பு காசுகள், வணிக முத்திரைகள், யானை தந்தத்தினாலான பகடைக்காய், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,600-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் நடக்கும் 2 ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT