முகப்பு
தமிழ்நாடு

விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை பாம்புக்குட்டிகள், அணில் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை 15 பாம்புக்குட்டிகள், அணிலை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை 15 பாம்புக்குட்டிகள், அணிலை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வந்த சென்னையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தாா். சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்தக் கூடையை சோதனை செய்தனா். அப்போது அதில், அரிய வகை 15 மலைப்பாம்புக் குட்டிகள், ஆப்பிரிக்கா அணில் ஆகியவை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால், அரியவகை உயிரினங்களை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவரைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்களை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, வெள்ளிக்கிழமை (செப்.15) அதிகாலை, சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் அந்த உயிரினங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் கடத்தி வந்த இளைஞரிடமே வசூலிக்கவும் முடிவு செய்துள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →