தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

DIN

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். 

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர், பருவமழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேரிடர் குறித்த தகவல்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், நிவாரண முகாம்களில் தேவையான வசதி உள்ளதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், சேதமடைந்த சாலைகளை விரைவில் சரி செய்ய வேண்டும், மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ போதும்... திவ்ய பாரதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

SCROLL FOR NEXT