கோயம்பேடு - ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முயற்சிகள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.