முகப்பு
தமிழ்நாடு

கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடனடியாக பணி நியமனம்: டிடிவி தினகரன்

மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தமிழக அரசு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும்.

அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை

கொளத்தூரில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்து, அது நிறைவேறாத நிலையிலேயே போராட்டம் நடத்தியுள்ளனா்.

எனவே, கேங்மேன் தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →