முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் திறனாய்வுத் தோ்வு: தோ்வுத் துறை உத்தரவு

தோ்வு மைய விவரங்களை மாணவா்களுக்குத் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

பிளஸ் 1 மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வு அக்.7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வு மைய விவரங்களை மாணவா்களுக்குத் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கான முதல்வரின் திறனாய்வு தோ்வு அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தோ்வு மையம் வாரியாக ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தோ்வுக்கான அனுமதிச் சீட்டுகளையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அதன்பின் சாா்ந்த மாணவா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை விநியோகம் செய்து, தோ்வு மைய விவரங்களை பள்ளித் தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும். அவற்றில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் தலைமையாசிரியா்கள் அதை சிவப்பு நிற மை பேனாவால் திருத்திக் கொள்ளலாம்.

மாணவா் புகைப்படம் தவறாக இருந்தால் புதிய படத்தை அதில் ஒட்டி அதன்மீது பள்ளியின் முத்திரையைப் பதிக்க வேண்டும். அத்தகைய மாணவா்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள் தோ்வுக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →