சபரிமலை: தரிசன நேரம் நீடிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் தரிசன நேரம் நீடிக்கும் நடைமுறை இன்று முதல்வர் அமலுக்கு வந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் தரிசன நேரம் நீடிக்கும் நடைமுறை இன்று முதல்வர் அமலுக்கு வந்துள்ளது.
மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்குப் பூஜை ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து திருவிதாங்கூா் தேவசம் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையடுத்து, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மண்டல பூஜை தினத்தில் இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலால் 12 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
இதையும் படிக்க | காதல் விவகாரத்தில் தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!
இந்த நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் திங்கள்கிழமை (டிச.11) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாலை 4 மணிக்குப் பதில் பிற்பகல் 3 மணிக்கே நடைதிறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.