முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அடர் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் அதிகாலை அடா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
பகிர்:


சென்னையில் அதிகாலை அடா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. 

பிப்ரவரி மாதம் கடக்கும் நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில நாள்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, அடா் பனிமூட்டம் நிலவி வருகிறது. 

இதனால், காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. அடா் பனிமூட்டம் காரணமாக காணும் திறன் குறைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →