முகப்பு
தமிழ்நாடு

நீடாமங்கலம்: பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!

நீடாமங்கலம்: நீடாமங்கலம்  அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
நீடாமங்கலம்  அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்மையார் சமேத நடராஜப்பெருமான்.
பகிர்:


நீடாமங்கலம்: நீடாமங்கலம்  அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவகாமி அம்மையார் சமேத நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல் நீடாமங்கலம்  காசிவிசுவநாதர் கோயிலில் நடராஜப்பெருமான், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.சுவாமி வீதியுலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்மை சமேத நடராஜப்பெருமான்.

இதேபோல் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில், நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோயில்,ரிஷியூர் கற்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →