முகப்பு
தமிழ்நாடு

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இரவுமுதல் சாரல் மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. 

Updated On : 26 ஜூலை, 2023 at 8:22 AM
பகிர்:


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. 

சென்னையில் சென்ட்ரல், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம், வளசரவாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. 

இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், மணலி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பூவிந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் விட்டுவிட்டு மழை பெய்தது. 

Advertisement

இதனால், அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.