பொதுத்தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!
பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் 14-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 20 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
இதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் மின்வாரியம் இன்று முக்கிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதுபோல, மாணவர்கள் தேர்வெழுதும்போது மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்யவும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.