முகப்பு
தமிழ்நாடு

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீர் நாடாளுமன்ற கூட்டம்: முதல்வர் விமர்சனம்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு திடீரென நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Updated On : 3 செப்டம்பர் 2023, 11:52 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு திடீரென நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சென்னையில் திமுக நிர்வாகி மனோகரன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என கூறுகிறார்கள். கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். கொள்கை குடும்பமாக இருக்கிறோம். அதுதான் முக்கியம். யார் காலிலும் தவழ்ந்து சென்று பதவியை பிடிக்கவில்லை. தமிழ்நாட்டை காப்பாற்ற எப்படி ஒரு வெற்றியை கொடுத்தீர்களோ, அப்படி ஒரு வெற்றி இந்தியாவிற்கும் தேவை. இந்தியா என பெயர் சொல்லவே பாஜக அஞ்சுகிறது. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையால் திமுகவிற்கு மட்டுமல்ல எல்லா கட்சிகளுக்குமே பாதிப்புதான். ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது.  ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீரென நாடாளுமன்ற கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது.

Advertisement

Advertisement

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக் குழுவில் திமுக சேர்க்கப்படவில்லை. பலிகடா ஆகப் போவதை உணராமல் அதிமுக ஒரே நாடு,ஒரே தேர்தலை ஆதரிக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தபோது ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்த அதிமுக இப்போது ஆதரிக்கிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தில் இன்னும் ஆட்சி முடியவில்லை. இன்னும் 2.5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி உள்ள நிலையில் ஆட்சியை கலைப்பீர்களா? நாட்டின் அதிபராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். தவிர நாட்டின் நிலை குறித்து நினைக்கவில்லை. தேர்தல் செலவை குறைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்கிறார்கள். முதலில் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். இந்தியாவையும், கழகத்தையும் காக்க நீங்கள் அனைவரும் உறுதிமொழியேற்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments