தமிழ்நாடு

தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

அவிநாசியில் தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு விநியோகிக்கும் குடிநீர் தரமானதாக இல்லாததால், தொடர்ந்து பொதுமக்கள் காய்ச்சல், சளி, தொன்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, ஏற்கனவே பல ஆண்டுகளாக வழங்கி வந்த 2வது குடிநீர் திட்ட குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து இலச்சினை வெளியீடு, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்ட வியூகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, அவிநாசி பேரூராட்சி 13வது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம், வாணியர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெறலாம்’

பெண்ணிடம் சங்கிலி பறித்தவா் கைது

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: பெண் கைது

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT