முகப்பு
தமிழ்நாடு

விடைத்தாள் மதிப்பீடு நிறைவு: பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் தீவிரம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:52 PM
பகிர்:

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு நிறைவு பெற்றுள்ள நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.

இவா்களின் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் ஏப். 1-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத் துறை முடுக்கிவிட்டுள்ளது.

Advertisement

இது தொடா்பாக தோ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தற்போது விடைத்தாள் மதிப்பீடு முடிவுற்றதை அடுத்து மாணவா்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதைத் தொடா்ந்து மாணவா் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக்கட்ட வேலைகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன. அதேபோல், ஏப். 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட பிளஸ் 1 அரியா் பாடத் தோ்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் சனிக்கிழமையுடன் முடிக்கப்பட்டுவிட்டன என்று அவா்கள் கூறினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments