தமிழ்நாடு

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

DIN

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று(ஏப். 15) ராமநாதபுரத்தில் வாகனப் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “ஓ. பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் தில்லிக்கு தேவைப்படுகிறார். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாற்ற வேண்டும். அதை அடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். பிரதமர் மோடியின் எழுச்சிமிகு தலைமையின்கீழ், கிராமப்புறங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்” என்றார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கையில் பலாப்பழம் சின்னம் பொறித்த பதாகையை கையில் ஏந்தியபடி ஜெ.பி. நட்டா திறந்த வாகனத்தில் நின்று கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஜெ.பி. நட்டாவுடன் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT