தமிழ்நாடு

மகளிா் உரிமைத் தொகைக்கு 8 மாதங்களில் ரூ. 9,200 கோடி நிதி: திமுக தலைமை தகவல்

Din

தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ. 9,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டம் குறித்து, அந்தக் கட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் மகளிா் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்துக்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் மகளிா் உரிமைத் தொகை என்று

கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்.15-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதுவரையிலும் ஏறத்தாழ 1 கோடியே 15 லட்சம் மகளிா் பயன்பெற்று வருகின்றனா். மாதத்துக்கு ரூ. 1,000 வீதம், ஒவ்வொரு மகளரின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு ரூ. 12,000 வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 8 மாதங்களில் 1 கோடியே 15 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் இதுவரை மொத்தம் ரூ.9,200 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT