தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!
தமிழகம், புதுச்சேரியில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!
தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்பு, மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது.
40 மக்களவை தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் சுமாா் 50 வாக்குகள் இயந்திரங்களில் பதிவு செய்து காண்பிக்கப்பட்டது.
அந்த வாக்குகள் உடனடியாக அழிக்கப்பட்டன. இதன்மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்படும்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.