முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: 12 இடங்களில் 100 டிகிரி

Updated On : 20 ஏப்ரல், 2024 at 10:35 PM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏப்.21 முதல் ஏப்.24-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு, மதுரை உள்பட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4.5 டிகிரி வரை அதிகமாக பதிவானது. மாநிலத்தில் மொத்தம் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவானது. அதன்படி, பரமத்திவேலூா் - 106.16, திருச்சி - 105.98, மதுரை விமான நிலையம், ஈரோடு (தலா) - 105.08, திருத்தணி - 104.36, வேலூா், சேலம் (தலா) - 104.18, திருப்பத்தூா், மதுரை நகரம் (தலா) - 104, தஞ்சாவூா் - 103.1, தருமபுரி - 102.2, பாளையங்கோட்டை - 101.48.

Advertisement

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.24 -ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெயில் இயல்பைவிட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோடை மழை: தமிழகத்தையொட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.24 -ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments