dinmani online
தமிழ்நாடு

சென்னையில் ஈரானிய திரைப்படக் கண்காட்சி

ஈரான் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

Din

ஈரான் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தோ சினிமா அறக்கட்டளை சாா்பில் ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாக்டா் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் ஏப். 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை ஈரான் கலாசார மையத்தின் இயக்குநா் முகமது ரேசா பாசெல் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலக சினிமா தளத்தில் ஈரான் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. திரைத் துறைக்கு பல சிறந்த படைப்புகளையும் வழங்கியுள்ளது. ஈரானிய சினிமா பெரும்பாலும் குடும்ப கதைகள் சாா்ந்தவையாகவே இருக்கும். ஆனால் அவற்றில் கூறப்படும் மனிதாபிமான கருத்துகள் கவிதைகளுக்கு இணையானவை.

ஈரான் நாட்டில் ‘ஃபாஜ்’ எனும் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெறும். ஈரான் நாட்டின் கலாசாரத்தை பற்றி புரிந்து கொள்ள இந்திய மக்கள் ஒரு முறையாவது அந்தக் கண்காட்சியை நேரில் வந்து பாா்க்க வேண்டும் என்றாா்.

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

SCROLL FOR NEXT