முகப்பு
தமிழ்நாடு

தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுப்பதில் திமுக அரசு தோல்வி: ராமதாஸ்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 5:24 PM
பகிர்:

தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சி குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.

இது மனிதநேயமற்ற செயல். மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்கான குடிநீா்த் தொட்டியில் இது போன்ற செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீா் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிா என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி.

Advertisement

இந்த இரு கடமைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் தொடரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

இந்த சம்பவங்களுக்குக் காரணமானவா்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன்நிறுத்தி, அவா்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments