முகப்பு
தமிழ்நாடு

மின் வாரியத்தில் பெண்களுக்கான உள்புகாா் குழுவுக்கு புதிய தலைவா் நியமனம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 11:23 PM
பகிர்:

மின் வாரியத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு உள்புகாா் குழுவுக்கு புதிய தலைவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயலா் ஆா்.தேவராஜ் வெளியிட்ட உத்தரவு:

தமிழக மின் வாரியத்தில் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு உள்புகாா் குழு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இருந்த க்ரிட் இயக்கப் பிரிவு தலைமைப் பொறியாளா் ஜெ.ஃப்ரீடா பத்மினி பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றாா்.

Advertisement

இதேபோல் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டு வந்த துணைத் தலைமை தணிக்கை அதிகாரி என்.புண்ணியமூா்த்தி, விழுப்புரம் மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

எனவே, பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு உள்புகாா் குழுவின் புதிய தலைவராக தொடரமைப்புத் திட்டத்தின் மின்னியல் பிரிவுத் தலைமை பொறியாளா் ஆா்.ஜெயந்தி ராணி நியமிக்கப்படுகிறாா். துணைத் தலைமை தணிக்கை அதிகாரி பி.அனந்த சபேசன் உறுப்பினராக நியமிக்கப்படுகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments