சென்னை: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! காவல்துறை விசாரணை
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை
சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சென்னை ஆர். ஏ. புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு காவல்துறை டிஜிபி பெயரில் மின்னஞ்சல் மூலம், 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.