மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
மகளிர் உரிமைத்தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கோவையில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.
மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் பரவிய போலியான தகவலை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் சனிக்கிழமை காலை குவிந்தனர்.
மகளிர் உரிமைத்தொகைக்காக பலமுறை விண்ணப்பித்தும் தங்களுக்கு இதுவரையிலும் பணம் கிடைக்கவில்லை எனவும், இந்த சிறப்பு முகாமில் எங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதுபோன்ற முகாம் எதுவும் நடக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.