கோவையில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.
மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் பரவிய போலியான தகவலை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் சனிக்கிழமை காலை குவிந்தனர்.
மகளிர் உரிமைத்தொகைக்காக பலமுறை விண்ணப்பித்தும் தங்களுக்கு இதுவரையிலும் பணம் கிடைக்கவில்லை எனவும், இந்த சிறப்பு முகாமில் எங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதுபோன்ற முகாம் எதுவும் நடக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.