கோப்புப் படம் 
தமிழ்நாடு

பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டி வீரன் வீரவணக்க நாளுக்காக தென்காசியில் ஊரடங்கு!

4 பேருக்கு அதிகமானோர் கூடி நின்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

இணையதளச் செய்திப் பிரிவு

தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் மற்றும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, மொத்தமாக ஆறு நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஒண்டிவீரன் வீரவணக்க நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் நெல்கட்டும்செவல் பகுதியில், இன்று (ஆக. 18) மாலை முதல் ஆக. 21 ஆம் தேதி காலை வரையில் நான்கு நாள்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பூலித்தேவனின் 309 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆக. 30 ஆம் தேதி முதல் செப். 2 ஆம் தேதி காலை 10 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பின்படி, 4 பேருக்கு அதிகமானோர் கூடி நின்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்ச்சிகளுக்காகவும், தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக ஆறு நாள்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT