முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாளை (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 10:41 AM
கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாளை (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 முதல் 8 மணி வரை, பகல் 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி காரணமாக திங்கட்கிழமை அரசு பொது விடுமுறை என்பதால் மெட்ரோ ரயில் சேவையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →