கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. காலை 3.45 மணியளவில் கோவை வரும் விமானம் மீண்டும் அதிகாலை 4.30 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டு செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.