கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக சுங்கச் சாவடிகளில் அமலுக்கு வந்த கட்டண உயர்வு!

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டண உயா்வு..

Din

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டண உயா்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) முதல் அமலுக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நிகழாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தோ்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தோ்தல் முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயா்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நியூ பிகினிங்க்ஸ்! ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை!

6 நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது: சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

நாணயங்களாக ரூ. 40 ஆயிரம் சேமித்து மகளுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த விவசாயி

பைசன் படத்துக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து!

தங்கம் விலை புதிய உச்சம் தொடுமா? பாபா வங்காவின் 2026 கணிப்பு என்ன?

SCROLL FOR NEXT