தீப்பற்றி எரியும் ஆம்னி கார். 
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது.

DIN

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிட்டே பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி.

இருவரும் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை ஆம்னி காரில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.

ஃபென்ஜால் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் புதுவை!

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இரண்டு பேரும் உடனே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினர். சில நிமிடங்களில் காரில் தீ மளமள என பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT