தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு கழற்சிவலுப்பெற்று சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச. 8) மேலும் வலுப்பெறும். அதைத் தொடர்ந்து, இது மேலும் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து டிச.11-ஆம் தேதிக்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) முதல் டிச. 13-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.