கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ நிலையப் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் இன்று முதல்‌ ஒரு வார காலத்திற்கு அண்ணா மேம்பாலம்‌ மெட்ரோ ரயில்‌ நிலையம்‌, நுங்கம்பாக்கம்‌ மெட்ரோ நிலையம்‌ மற்றும்‌  ஸ்டேர்லிங்‌ சாலை மெட்ரோ ரயில்‌ நிலையம் ‌ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேத்துப்பட்டில்‌ இருந்து ஜெமினி மேம்பாலம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ காலேஜ்‌ ரோடு, ஹாடேஸ்‌ ரோடு, உத்தமர்‌ காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும்‌ வகையில்‌ செல்லும் ‌(ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்‌.

இதேபோல்‌, ஜெமினி மேம்பாலத்தில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ , உத்தமர்‌ காந்தி சாலை, கோடம்பாக்கம்‌ நெடுஞ்சாலை (டாக்டா்‌ எம்‌.ஜி.ஆர்‌. சாலை) வழியாக வள்ளுவர்‌ கோட்டம்‌ நோக்கி சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌. (மாற்றுப்பாதை - ஒரு வழிப்பாதை).

அமைந்தகரை நோக்கிச்‌ செல்லும்‌ வாகனங்கள்‌ டேங்க்‌ பண்ட்‌ சாலையில்‌ (இடதுபுறம்‌) திரும்பி நெல்சன்‌ மாணிக்கம்‌ சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும்‌ பிற இடங்களுக்குச்‌ செல்லலாம்‌. (எற்கனவே உள்ளபடி).

வள்ளுவர்‌ கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம்‌ நோக்கிச்‌ செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ வள்ளுவர்‌ கோட்டம்‌ சந்திப்பில்‌, வள்ளுவர்‌ கோட்டம்‌ நெடுஞ்சாலை, உத்தமர்‌ காந்தி சாலை வழியாகத்‌ திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம்‌ அல்லது வலதுபுறம்‌ திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம்‌ (ஜெமினி மேம்பாலம்‌) சென்று அடையலாம்‌.

மற்ற பிற உள்பற சாலைகள்‌ அனைத்தும்‌ மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT