முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ராஜிநாமா: ஆளுநர் ஒப்புதல்

அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ராஜிநாமா கடிதத்திற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Updated On : 13 பிப்ரவரி 2024, 11:44 am IST
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், 8 மாதங்களுக்கும் மேலாக துறை இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

Advertisement

Advertisement

நேற்று, செந்தில் பாலாஜி, அவரது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை தமிழக அரசின் பொதுத் துறையிடம் நேற்று அவர் வழங்கினார்.

பின்னர், இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments