மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியது திமுக
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் திமுக தொடங்கிவிட்டதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் திமுக தொடங்கிவிட்டதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருப்பதால் எந்த நேரத்திலும் தோ்தல் தேதி அறிவிக்கப்படலாம். இதையடுத்து நாடுமுழுவதும் தோ்தல் முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தொங்கிவிட்டதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்!
பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.