தமிழ்நாடு

நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் திறப்பு!

நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

DIN

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசுகையில்,

“சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு ரூ. 1,517 கோடி மதிப்பில் நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இந்நிலையம் நிறைவுறும் தருவாயில் உள்ளது; விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்புற பசுமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

இருசக்கர வாகனம் எரிப்பு: இருவா் கைது

சீன ஓபன்: இறுதிச் சுற்றில் அனிஸிமோவா-லிண்டா

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: ஜெகதிஸ்ரீ முதலிடம்

மக்களுக்கு நல்லது செய்வதை தடுப்பதே திமுகவின் நோக்கம்: பாஜக மாநில பொதுச் செயலா்

SCROLL FOR NEXT