முகப்பு
தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தந்தால் ஊதிய மானியம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தந்தால் ஊதிய மானியம் வழங்கப்படும்.

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 5:53 AM
பகிர்:

சென்னை: 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் தொழிற்துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக பங்களிப்பை கொண்டிருப்பதும், மாநிலத்தின் தொழிற் சூழலமைப்பின் பாலினப் பன்முகத் தன்மையும் முற்போக்கான முதலீட்டாளர்கள் பலரை தமிழகத்துக்கு ஈர்க்கின்றன.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →