கூடலூரில் பொது சுகாதார ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சுகாதார வளர்ச்சிக்கு புதிய அடையாளம்: கூடலூரில் அதிநவீன ஆய்வகம்
தேனி மாவட்டம், கூடலூரில் ரூ 50 லட்சம் மதிப்பில் பொதுசுகாதார ஆய்வகம் தொடங்கிவைக்கப்பட்டது.
கூடலூர், நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ 50 லட்சம் மதிப்பில் பொதுசுகாதார ஆய்வகத்தை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன், நகர்மன்ற தலைவி பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் கே.எஸ்.காஞ்சனா, திமுக செயலாளர் சி.லோகந்துரை, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.