தமிழ்நாடு

தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201 கோடி நிவாரணம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தென் மாவட்டங்களில் பெய்த பெரு மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சனிக்கிழமை அரசாணை வெளியிட்டது. தென் மாவட்டங்களில் டிசம்பா் 17,18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் பயிா்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளம் பாதித்த பகுதிகளை டிச. 21-ஆம் தேதி பாா்வையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தாா். அதனடிப்படையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான 1,64,866 ஹெக்டோ் வேளாண் பயிா்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.160 .42 கோடி நிவாரணம் வழங்கவும், 38,840 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.41.24 கோடி நிவாரணம் வழங்கவும், மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்க வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையால் சனிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT