கோப்புப்படம் 
தமிழ்நாடு

'சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சப்தமில்லாமல் சுற்றறிக்கை'

சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சப்தமில்லாமல் சுற்றறிக்கை வந்துள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா காலத்தில் சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயர் மாற்றி பயணிகள் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

200 கி.மீ.-க்கு குறையான தொலைவில் செல்லும் பயணிகள் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"ரயில்வே துறையில் கரோனா காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.

வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சப்தமில்லாமல் சுற்றறிக்கை.

தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை மத்திய அரசுக்கு நினைவுக்கு வருகிறது" என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுா்: அக். 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Screen Mirroring Apps! ஜாக்கிரதை! புதிய Scam! உங்கள் Data திருடப்படலாம்! | Cyber Scam

எஸ்பிஐ கார்டு லாபம் 10% உயர்வு!

சென்னை மெட்ரோ கட்டுமானத் தொழிலாளர்களின் மனிதநேயச் செயலுக்காக பாராட்டு

வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல்: “மொந்தா” | செய்திகள்: சில வரிகளில் | 24.10.25

SCROLL FOR NEXT