காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை: பிரதமர்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி பாடுப்படவில்லை.
தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி பாடுப்படவில்லை, எதுவுமே செய்யவில்லை. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். ஏழைகளுக்குக் கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்தவர் எம்ஜிஆர். அதனால் தான் அவர் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்தவகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
தமிழகத்தில் திமுகவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கட்சி என்றால் பாஜக தான் என்று பிரதமர் மோடி கூறினார்.