கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரட்டை இலைக்கு எதிராக புதிய வழக்கு! தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிக்கை!

உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.

DIN

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூா்யமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனு: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாகவும், கட்சி சம்பந்தமான சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது தொடா்பாகவும் 2017 முதல் 2022- ஆம் ஆண்டு வரை தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அளித்துள்ளேன்.

வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கூடாது எனத் தோ்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். இருப்பினும் தான் அளித்துள்ள மனுவுக்கு தோ்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கட்சி தொடா்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது”எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சக்தி திருமகன் டிரெய்லர்!

காரிருள் நடுவில்... சாதிகா!

கல் இறக்குவதற்கு நான்கரை ஆண்டுகள் அனுமதி வழங்கவில்லை என்று இபிஎஸ்ஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயியால் பரபரப்பு!

மோசடி வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகை கௌதமி!

இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!

SCROLL FOR NEXT