கிளாம்பாக்கத்திலிருந்து 2,900 புறநகா் பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 2,900 புகா் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்
தமிழ்நாடுகிளாம்பாக்கத்திலிருந்து 2,900 புறநகா் பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 2,900 புகா் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 2,900 புறநகா் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை அருகே கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நேரக் காப்பாளா் அறை, கண்காணிப்பு அறை, நடைமேடை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அமைச்சா் சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பேருந்து முனையத்திலிருந்து செயல்படுத்தப்படும் பேருந்து சேவைகள் குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
இதுவரை இப்பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்ட முக்கிய நகரங்களுக்கு 164 அரசு விரைவுப் பேருந்துகளும், சென்னையில் உள்ள முக்கிய இடங்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் மூலமாக 2,900 நடைகள் பேருந்தும் இயக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளா்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.