கோப்புப்படம் 
தமிழ்நாடு

அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள்: இன்று முதல் விசாரணை

தமிழக அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை முதல் விசாரிக்க உள்ளதாக

DIN

சென்னை: தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை முதல் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் தொடா்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தாா். இந்த நிலையில், சுழற்சி முறையில் மதுரை உயா்நீதிமன்றத்துக்கு அவா் மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து தற்போது மீண்டும் அவா் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் வழக்குகளை விசாரிக்கவுள்ளாா்.

ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த க.பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயச்சந்திரன் விசாரித்து, தண்டனையை உறுதி செய்தாா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிக்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT