முகப்பு
தமிழ்நாடு

மழை நிவாரணத் தொகையை பிரதமரிடம் கேட்பேன்: உதயநிதி

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வழங்க நேரில் செல்லவுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி இதனைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
உதயநிதி ஸ்டாலின்(கோப்புப் படம்)
பகிர்:


தமிழக மழை வெள்ளத்துக்குத் தேவையான நிவாரணத் தொகையை பிரதமர் நரேந்திர மோடியிடம் கட்டாயம் கேட்பேன் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வழங்க நேரில் செல்லவுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி இதனைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை சந்தித்து அழைப்பிதழை வழங்கவுள்ளேன். நிகழ்ச்சியில் பங்கேற்பது அவர் விருப்பம். ]

பிரதமரை சந்திக்கும்போது தமிழகத்துக்குத் தேவையான நிவாரணத் தொகையை கோருவேன் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.