தமிழ்நாடு

ஜனவரி 21 இல் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு: தலைமைக் கழகம் அறிவிப்பு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

DIN

"மிக்ஜம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த 1980 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி உருவாக்கப்பட்டது. தற்போது அது மிகப்பெரிய அணியாக உருவெடுத்து உள்ளது. குறிப்பாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சுமாா் 25 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்த்து கட்சிக்கு வலுசோ்த்து உள்ளாா். 

இதையடுத்து கடந்த ஆண்டு டிச. 17- ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் "மிக்ஜம்” புயல் மழை பாதிப்பு காரணமாக, டிச.24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக  மீண்டும் மாநாடு நடைபெறும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், "மிக்ஜம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக  ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2 -ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான அச்சாரமாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT