மாட்டுபொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா ஜன. 16 ஆம் தேதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கமாக பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும்.
ஆனால் தற்போது ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாட்டு பொங்கலையொட்டி மக்கள் வருகை இருக்கும் என்பதால் அன்றைய தினம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: விஜயகாந்த் படத்துக்கு பியூஷ் கோயல் மரியாதை!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200-ஆக உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.