வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15-இல் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 4 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1-ல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழைபொழிவை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை நீடித்து வருகின்றது.
இந்த நிலையில், தென் இந்தியப் பகுதிகளில் ஜன.15இல் வடகிழக்குப் பருவமழை நிறைவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.